பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது


பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2021 8:34 PM GMT (Updated: 14 March 2021 8:34 PM GMT)

பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கைது

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சாமியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்தப் பகுதியில் உள்ள முட்புதர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டனர். உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்தனர். அதில் முட்புதரில் பதுங்கி இருந்து ஆயுதங்களை காட்டிவழிப்பறி செய்ய திட்டமிட்டதாக தெரியவந்தது. இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன்(வயது 34), விஜயராஜா(25), பிரபு(30), சின்ன ராஜா(23), வெங்கடேசன்(22) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Next Story