லாரிகள், சாலையில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல்


லாரிகள், சாலையில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 15 March 2021 4:17 PM GMT (Updated: 15 March 2021 4:17 PM GMT)

நாகையில் தனியார் எடைபோடும் மையத்திற்கு வரும் லாரிகள், சாலையில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

நாகப்பட்டினம்:
நாகையில் தனியார் எடைபோடும் மையத்திற்கு வரும் லாரிகள், சாலையில் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து ெநரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
நெல் அறுவடை பணி
நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள்  முடிவடைந்து விட்டன. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் மொத்தம் 314 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் 11 திறந்த வெளி நெல் சேமிப்பு மையங்கள் உள்ளன. இதில் மயிலாடுதுறை வட்டாரப்பகுதியில் 5 சேமிப்பு மையங்களிலும், நாகை வட்டாரப்பகுதியில் 6 சேமிப்பு மையங்களிலும் நெல் சேமிக்கும் பணி நடைபெற்று வந்தன. 
நாகை பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் சேமிக்கப்பட்ட நெல் மூட்டைகள் எடை போடுவதற்காக லாரிகள் மூலம் முதலாவது கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான எடை போடும் மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
எடை போட்ட பின்னர் அங்கிருந்து திறந்தவெளி சேமிப்பு மையங்களுக்கும், அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. நாகை முதலாவது கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணி, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பல்வேறு அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.
 இந்த எடை போடும் மையம் வரும் லாரிகள் முதலாவது கடற்கரை சாலையோரத்தில் வரிசையாக காத்து கிடக்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்ல அவதிப்படுகிறது.. குறிப்பாக ஆம்புலன்ஸ் கூட இந்த பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நாகை புற வழிச்சாலையில் எடைபோடும் மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story