நாசரேத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


நாசரேத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2021 1:36 PM GMT (Updated: 16 March 2021 1:36 PM GMT)

நாசரேத்தில் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாசரேத்:
நாசரேத் வகுத்தான்குப்பத்தை சேர்ந்தவர் லெனின்குமார் (வயது 41). தொழிலாளி. இவரது மனைவி ஆறுமுககனி (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி ஆறுமுககனி தனது 2 குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு பெருமாள்குளத்திலுள்ள, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். லெனின்குமார் தனது தகப்பனார் அய்யாதுரை (78) மற்றும் தாயாருடன் வகுத்தான்குப்பத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவியும், குழந்தைகளும் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டின் முன் அறையில் உள்ள உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அய்யாதுரை நாசரேத் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story