கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு


கள்ளக்குறிச்சியில்  4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 22 March 2021 5:20 PM GMT (Updated: 22 March 2021 5:20 PM GMT)

கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கலெக்டர் கிரண்குராலா நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி

வாக்கு எண்ணிக்கை மையம்

சட்டசபை தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி.நினைவு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்கு எண்ணும் அறை ஆகியவற்றை தயார்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா நேற்று நேரில் ஆய்வு செய்தார். 

பாதுகாப்பு வசதிகள்

அப்போது 4 தொகுதிகளில் உள்ள 1,569 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் குறிப்பிட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் ஆகிவற்றை வைக்கும் அறையில் உள்ள வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநரும், வாக்கு எண்ணும் மையத்தின் அலுவலருமான மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன், உதவி பொறியாளர்கள் சத்தியபிரியா, யாசர் அராபத், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன், சங்கராபுரம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத் காதர் மற்றும் வருவாய்த்துறை அலுலர் கமலக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராமசாமி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story