பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 23 March 2021 5:57 PM GMT (Updated: 23 March 2021 5:57 PM GMT)

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காரைக்குடி,

காரைக்குடி சி.மெ.வீதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி கல்யாணி (வயது 58) இவர் அருகில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார். சிவகாளியம்மன் கோவில் அருகே வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story