பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடிவேரி அணையில் குளிக்க 10 நாட்கள் தடை


பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடிவேரி அணையில் குளிக்க 10 நாட்கள் தடை
x
தினத்தந்தி 23 March 2021 10:44 PM GMT (Updated: 23 March 2021 10:44 PM GMT)

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கொடிவேரி அணையில் குளிக்க 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடத்தூர்
 கொரோனா நோய் பரவாமல் இருக்க கடந்த ஆண்டு கொடிவேரி அணை மூடப்பட்டது. அதன் பிறகு 9 மாதங்கள் கழித்து சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் கடந்த ஜனவரி மாதம் தைப்பொங்கல் பண்டிகை வரை மூடப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து அங்கு அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து சென்றனர்.
இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்களுக்கு கொடிவேரி அணை மூடப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவோ, கொடிவேரி அணையின் இயற்கை அழகை பார்க்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் கூறினார்கள். 

Next Story