நன்னிலம் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் முதல் நபராக இருப்பேன் - அமைச்சர் காமராஜ் பிரசாரம்


நன்னிலம் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் முதல் நபராக இருப்பேன் - அமைச்சர் காமராஜ் பிரசாரம்
x
தினத்தந்தி 24 March 2021 3:05 AM GMT (Updated: 24 March 2021 3:05 AM GMT)

நன்னிலம் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் முதல் நபராக இருப்பேன் என தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் காமராஜ் கூறினார்.

குடவாசல்,

நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ரா.காமராஜ் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  இதையொட்டி ஆத்தூர், கிள்ளியூர், சுரைக்காயூர், திருப்பாம்புரம், செருகுடி, வடுகக்குடி, திருவீழிமிழலை, அண்ணியூர், வடமட்டம், பரவாக்கரை, சற்குணேஸ்வரபுரம், கடலங்குடி, கூந்தலூர், மணவாளநல்லூர், தேதியூர், எரவாஞ்சேரி, மருத்துவக்குடி, விஷ்ணுபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்ற அவர் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடும்படி பொதுமக்களை கேட்டு கொண்டார். 
ஆத்தூரில் பிரசாரத்தின்போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
 
நன்னிலம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக உங்கள் முன் நிற்கிறேன். இப்படி உங்கள் முன் நான் நிற்பது ஒரு அதிசயமான நிகழ்வு. ஏனெனில் நான் உயிர் பிழைப்பேனா? என்று அஞ்சிய நிலையில் நன்னிலம் தொகுதி வாக்காளர்கள் எனக்காக பிரார்த்தனை செய்து என்னுடைய உயிரை மீட்டு கொடுத்துள்ளனர். எனது உயிரை மீட்டுக் கொடுத்த உங்கள் அனைவரின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். 
இறைவனிடம் பிரார்த்தனை செய்ததன் மூலம் என் உயிரை மீட்டுக் கொடுத்த நன்னிலம் தொகுதி வாக்காளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். 

நன்னிலம் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் முதல் நபராகவும் இருப்பேன். கடந்த 2 முறை என்னை வெற்றிபெற செய்தீர்கள். மீண்டும் உங்களிடத்தில் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. 
பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2,500-ஐ முதல்-அமைச்சர் ்வழங்கினார். விவசாய கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்.

ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். வீடு தோறும் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் அறிவிததுள்ளார். இந்த வாக்குறுதிகள் தேர்தலுக்கு பின்னால் உடனடியாக நிறைவேற்றப்பட்டு பொருட்கள் உங்கள் தேடி வீடு தேடி வந்து சேரும். 

மக்கள் நலத்திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார். பிரசாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story