பரமத்திவேலூர் அருகே மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த டிரைவர் கைது


பரமத்திவேலூர் அருகே மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 25 March 2021 1:47 AM GMT (Updated: 25 March 2021 1:47 AM GMT)

பரமத்திவேலூர் அருகே மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த டிரைவர் கைது

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). டிரைவர். இவருடைய மனைவி தனலட்சுமி. இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் தனலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து சென்று விட்டாராம். 
இந்தநிலையில் பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூர் பகுதியை சேர்ந்த நித்யா (32) என்பவருக்கும், முருகேசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையொட்டி 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே முருகேசனுக்கும், நித்யாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையொட்டி சம்பவத்தன்று முருகேசன், நித்யா மீது சந்தேகப்பட்டு அவரது செல்போனை பிடிங்கி கீழே போட்டு உடைத்துள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முருகேசன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து நித்யா மீது ஊற்றி தீ வைத்தார். 
இதில் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய நித்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பரமத்திவேலூர் போலீசார் முருகேசனை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story