நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட18 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் உள்பட18 பேருக்கு கொரோனா
x

18 பேருக்கு கொரோனா

நாமக்கல்:
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 12,001 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்துப்பிரிவு போலீஸ்காரர் உள்பட 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,019 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 13 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 111 பேர் பலியாகி இருந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 11,796 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 112 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Next Story