காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 26 March 2021 8:23 PM GMT (Updated: 26 March 2021 8:23 PM GMT)

காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

வேலாயுதம்பாளையம்
மண்மங்கலம் அருகே உள்ள பால்வார்பட்டியில் புதிதாக கோவில் கட்டப்
பட்டது. இதில் காமாட்சியம்மன், மாயவ பெருமாள், அங்காளம்மன், மதுரை வீரன் ஆகிய சாமிகளின் திருஉருவம் வைக்கப்பட்டது. பின்னர் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு யாக பூஜைகள் நடந்தது. பின்னர் விநாயகர் வழிபாடு, முதற்கால யாக பூஜைகள், துவார பூஜைகளுடன் அனைத்து சாமிகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பால்வார்பட்டி, கடம்பங்குறிச்சி, சிவியாம்பாளையம் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story