ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை


ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை
x
தினத்தந்தி 29 March 2021 7:03 PM GMT (Updated: 29 March 2021 7:03 PM GMT)

ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ராஜபாளையம்
ராஜபாளையம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
பலத்த மழை 
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். வழக்கம்போல் நேற்றும் வெயில் சுட்டெரித்தது. மாலை 5 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீச ெதாடங்கியது. 
பின்னர் 6.30 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 
ெபாதுமக்கள் மகிழ்ச்சி 
இந்த மழை ராஜபாளையம், சத்திரப்பட்டி, சம்சிகாபுரம், சங்கரபாண்டியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 7 மணி வரை பெய்தது. திடீரென பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story