திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்திருவிழா


திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்திருவிழா
x
தினத்தந்தி 29 March 2021 7:41 PM GMT (Updated: 29 March 2021 7:41 PM GMT)

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சமயபுரம், மார்ச். 30-
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டக்கான தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 4 மணிக்கு பெருமாள், தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஆனந்தராயர் மண்டபத்தை வந்தடைந்தனர்.
அதைத்தொடர்ந்து கருடன் படம் வரையப்பட்ட கொடி வீதிஉலாவாக எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து பெருமாள் தாயார் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 5.30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
கருடவாகனம்
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கற்பகவிருட்சத்தில் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு ஹனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (புதன்கிழமை)  அதிகாலை 2 மணிக்கு பெருமாள் தாயார் அனந்தராயர் மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி ஸ்ரீரங்கம் வட காவிரி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.
தொடர்ந்து 1-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு வழிநடை உபயங்கள் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைகிறார். அன்று இரவு கருடவாகனத்திலும், அடுத்தடுத்த நாட்களில் காலையில் ஹம்சவாகனம், இரவில் சேஷவாகனம், சிம்மவாகனம், யானைவாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார்.
தேரோட்டம்
4-ந்தேதி நெல்அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  5-ந் தேதி குதிரைவாகனத்தில் சுவாமி எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது.

Next Story