புளிய மரத்தில் மொபட் மோதியதில் விவசாயி பலி


புளிய மரத்தில் மொபட் மோதியதில் விவசாயி பலி
x
தினத்தந்தி 29 March 2021 8:39 PM GMT (Updated: 29 March 2021 8:39 PM GMT)

புளிய மரத்தில் மொபட் மோதியதில் விவசாயி பலியானார்.

வி.கைகாட்டி
அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு மொபட்டில் மணக்குடி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். கல்லங்குறிச்சி மாருதி நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது நிைல தடுமாறி சாலையோர புளியமரத்தில் மொபட் மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story