சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கணவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 30 March 2021 6:32 AM GMT (Updated: 30 March 2021 6:32 AM GMT)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப் பட்டனர்

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 24). இவருக்கும் 17 வயதுடயை ஒரு சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் வசித்த பக்கத்து வீ்ட்டை சேர்ந்த சவுந்தரராஜன் (24) என்பவர் அந்த சிறுமியிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த ரஞ்சித்குமார் மற்றும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சவுந்தரராஜன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story