வாத்தை விழுங்க முயன்ற மலைப்பாம்பு


வாத்தை விழுங்க முயன்ற மலைப்பாம்பு
x
தினத்தந்தி 30 March 2021 1:13 PM GMT (Updated: 30 March 2021 1:13 PM GMT)

பழனி அருகே வாத்தை விழுங்க முயன்ற மலைப்பாம்பு சிக்கியது

பழனி:

பழனி அருகே ஆயக்குடியில் பெரியகுளம் கால்வாய் உள்ளது. நேற்று இங்கு, 7 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வாத்தை விழுங்க முயன்றது. இதனைக்கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து அவர்கள், பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு, அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Next Story