சேதமான பாலத்தை சீரமைக்க கோரிக்கை


சேதமான பாலத்தை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 March 2021 5:15 PM GMT (Updated: 30 March 2021 5:15 PM GMT)

காளையார்கோவில் அருகே சேதமான பாலத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கல்லல்,

காளையார்கோவில் ஒன்றியம் பாகனேரியில் இருந்து காடனேரி செல்லும் சாலை கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த சாலையை அந்தப் பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் பூக்காடு கண்மாய் மீது கட்டப்பட்டு உள்ள பாலம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்கின்றனர். எனவே பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story