குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி 3வது நாளாக கறுப்புக்கொடி ஏற்றி கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி  3வது நாளாக கறுப்புக்கொடி ஏற்றி கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம்
x
தினத்தந்தி 30 March 2021 6:03 PM GMT (Updated: 30 March 2021 6:03 PM GMT)

பல்லடம் அருகே. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி 3வது நாளாக கறுப்புக்கொடி ஏற்றி கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினார்கள்.

பல்லடம
பல்லடம் அருகே. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி 3வது நாளாக கறுப்புக்கொடி ஏற்றி கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினார்கள்.
கஞ்சிதொட்டி திறப்பு
 பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. என்றும், ஊராட்சி நிர்வாகம் குடியிருப்பு வீடுகளுக்கு அதிக அளவில் வரிவிதிப்பு செய்துள்ளதாகவும், கூறி, கடந்த 2 நாட்களாக அங்குள்ள வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், காலிக்குடங்களுடன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த, வீட்டுவசதி வாரிய பொறியாளர் விசாகவேல், குடிநீர் வாரிய ஜெய்கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் குருவம்மாள், பல்லடம் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் ஒரு வார காலத்திற்கு குடிநீர் வழங்கும் பொறுப்பை குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்து சரிபார்ப்பது என்றும். தேர்தல் முடிந்தவுடன், வரிவிதிப்பு குறித்து பேசிக் கொள்ளலாம் என்றும், முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. வீடுகளில் கட்டிய கருப்புக்கொடி அகற்றாமல் அப்படியே உள்ளது.இந்த நிலையில் நேற்று அந்தப்பகுதிமக்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
தேர்தல் புறக்கணிப்பு
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது   அறிவொளி நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புபில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்கு வந்ததில் இருந்தே குடிநீர் பிரச்சினை உள்ளது. இது குறித்து பல முறை, வீட்டுவசதி வாரியத்திலும், ஊராட்சி நிர்வாகத்திலும், புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எப்போது போராட்டம் நடத்தினாலும், அதிகாரிகள் வந்து இரண்டு 3 நாட்களில் சரி செய்து விடுகிறோம் என்று சொல்லிச் செல்கின்றனர். பின்னர் அந்தப் பிரச்சினையை கண்டுகொள்வதில்லை. தற்போதும் அப்படியே நடக்கிறது. இதனால் போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால், தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story