20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 30 March 2021 8:02 PM GMT (Updated: 30 March 2021 8:02 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 280 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் வட்டாரத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது பெரம்பலூர் அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சை, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், போலீசார், சுகாதாரத்துறையினர் மற்றும் பொதுமக்கள் என 20 ஆயிரத்து 8 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story