பாளையங்கோட்டையில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில்  பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 March 2021 7:34 PM GMT (Updated: 31 March 2021 7:34 PM GMT)

பாளையங்கோட்டையில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மருத்துவ துறையில் 2015-ம் ஆண்டு மருத்துவ கல்வியில் சேர்ந்த படிப்பை முடித்துள்ள பயிற்சி டாக்டர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து தர வேண்டும்.

ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ அலுவலராக பணி நியமனம் செய்து மருத்துவ அலுவலருக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்ற
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story