குளித்தலை அருகே பனைமரத்தில் திடிரென தீ


குளித்தலை அருகே பனைமரத்தில் திடிரென தீ
x
தினத்தந்தி 1 April 2021 7:18 PM GMT (Updated: 1 April 2021 7:18 PM GMT)

குளித்தலை அருகே பனைமரத்தில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

குளித்தலை
குளித்தலை அருகே கரூர் - திருச்சி சாலையில் உள்ள பட்டவர்த்தி ஊருக்கு செல்லும் வழியில் சாலையோரம் இருந்த பனைமரத்தில் திடீரென நேற்று தீபிடித்துள்ளது. அந்த தீ அருகில் இருந்த மரத்திலும் பரவியது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பனைமரத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். சாலையோரம் இருந்த பனைமரத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தீ உடனடியாக அனைக்கப்பட்டதால் அருகில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.


Next Story