நாடாளுமன்ற தேர்தலுக்கு 1,919 பேர் தபால் ஓட்டு போட்டனர்


நாடாளுமன்ற தேர்தலுக்கு 1,919 பேர் தபால் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 2 April 2021 7:14 AM GMT (Updated: 2 April 2021 7:14 AM GMT)

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்த சிறப்பு முகாமில் நாடாளுமன்ற தேர்தலில் 1,919 பேரும், சட்டசபை தேர்தலில் 1,921 பேரும் வாக்களித்தனர்.

நாகர்கோவில்:
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்திருந்த சிறப்பு முகாமில் நாடாளுமன்ற தேர்தலில் 1,919 பேரும், சட்டசபை தேர்தலில் 1,921 பேரும் வாக்களித்தனர்.
5 ஆயிரம் போலீசார்
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமாி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு குமாி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரம் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினா், 1000 முன்னாள் படைவீரர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் தபால் வாக்குப்பதிவு செய்வதற்காக கன்னியாகுமாி மற்றும் நாகா்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டவா்களுக்கு நாகா்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும், விளவங்கோடு மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவா்களுக்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியிலும், குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவர்களுக்கு கருங்கல் பெத்லகேம் மெட்ரிக் பள்ளியிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இவர்களில் படிவம் 12 சமர்ப்பித்தவர்களுக்கு மட்டும் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு
மொத்தம் 5 ஆயிரம் பேரில் நாடாளுமன்றத் தொகுதிக்கு தபால் வாக்கு அளித்தவர்கள் எண்ணிக்கை சட்டசபை தொகுதி வாரியாக வருமாறு:-
நாகர்கோவில் தொகுதியில் 217 பேரும், கன்னியாகுமரி தொகுதியில் 369 பேரும், குளச்சல் தொகுதியில் 386 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 290 பேரும், கிள்ளியூர் தொகுதியில் 268 பேரும், விளவங்கோடு தொகுதியில் 389 பேரும் ஆக மொத்தம் 1,919 பேர் தபால் வாக்கு அளித்தனர்.
1,921 பேர்
சட்டமன்ற தொகுதி வாரியாக தபால் வாக்குப்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை வருமாறு:-
நாகர்கோவில் தொகுதியில் 218 பேரும், கன்னியாகுமரி தொகுதியில் 369 பேரும், குளச்சல் தொகுதியில் 386 பேரும், பத்மநாபபுரம் தொகுதியில் 288 பேரும், கிள்ளியூர் தொகுதியில் 268 பேரும், விளவங்கோடு தொகுதியில் 392 பேரும் ஆக மொத்தம் 1,921 பேர் தபால் வாக்கு அளித்தனர்.
மீதமுள்ளவர்கள் படிவம் -12 பெற்றவர்கள் தபால் வாக்கு சீட்டுகளைப் பெற்று, வாக்களித்து தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story