பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 6:39 PM GMT (Updated: 8 April 2021 6:39 PM GMT)

சேரன்மாதேவி அருகே பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் சங்கிலியை பறித்துச் சென்றார்.

சேரன்மாதேவி, ஏப்:
சேரன்மாதேவி அருகே உள்ள கங்கணான்குளம் பட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராசையா. இவருடைய மனைவி மயில்ராணி (வயது 53). இவர் நேற்று பட்டங்காடு பகுதியில் இருந்து, புதுக்கிராமம் நோக்கி, நடந்து சென்றார். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், மயில்ராணி கழுத்தில் கிடந்த சுமார் 4 பவுன் தங்க சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story