சிங்கப்பூர், துபாய் விமானங்கள் தாமதம் பயணிகள் அவதி


சிங்கப்பூர், துபாய் விமானங்கள் தாமதம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 8 April 2021 7:30 PM GMT (Updated: 8 April 2021 7:30 PM GMT)

சிங்கப்பூர், துபாய் விமானங்கள் திருச்சிக்கு வர தாமதம் ஆனதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

செம்பட்டு 
சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு 6.35 மணிக்கு வர வேண்டும். அதற்கு பதிலாக சுமார் 2½ மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்கு வந்து சேர்ந்தது. இதுபோல் துபாயில் இருந்து மாலை 6.30 மணிக்கு திருச்சிக்கு வர வேண்டிய விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இரவு 8.40 மணிக்கு வந்தடைந்தது. இதனால் இந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.

Next Story