பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 7:48 PM GMT (Updated: 8 April 2021 7:48 PM GMT)

பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது

தாயில்பட்டி
தாயில்பட்டி அருகே உள்ள ஜெகவீரன்பட்டி என்ற ஆண்டியாபுரம் ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி உஷாதேவி (வயது 25) இவர் வீட்டு முன்பு காலை 6 மணிக்கு வழக்கம்போல் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது 2 பேர் முகவரி கேட்பது போல் அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். பின்னர் அவர்கள். திடீரென உஷாதேவி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். கழுத்தில் 2 தங்கச்சங்கிலி அணிந்திருந்தார். அதில் அரை பவுன் தங்கச்சங்கிலியை மட்டும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசில் உஷா தேவி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story