மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை


மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை
x
தினத்தந்தி 8 April 2021 7:48 PM GMT (Updated: 8 April 2021 7:48 PM GMT)

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரை அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கடந்த 1.9.2014-ல் தனது 11 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பரிமளா விசாரணை செய்து, மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story