பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 8:04 PM GMT (Updated: 8 April 2021 8:04 PM GMT)

மதுரையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

மதுரை, 

மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story