அ.தி.மு.க. பிரமுகர் மகனுக்கு கத்திக்குத்து


அ.தி.மு.க. பிரமுகர் மகனுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 8 April 2021 8:36 PM GMT (Updated: 8 April 2021 8:51 PM GMT)

அ.தி.மு.க. பிரமுகர் மகனுக்கு கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

போத்தனூர்,

கோவையை அடுத்த வெள்ளலூர்  கென்னடி வீதியைசேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மனோரஞ்சிதம். இவர் அ.தி.மு.க. பிரமுகர். இவர்களுடைய மகன் சுரேந்திரன் (வயது 37). கேபிள் டி.வி. ஆபரேட்டர். 

 இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதன் (24) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. 

இந்த நிலையில் மதன், மோட்டார் சைக்கிளில் வந்த சுரேந்திரனை வழி மறித்து தாக்கி,கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் போராடிய சுரேந்திரனை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மதனை தேடி வருகின்றனர். முன்னதாக மதனை கைது செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீசார் அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story