திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழப்பு


திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 April 2021 7:00 PM GMT (Updated: 9 April 2021 7:00 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 213 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சி
ஒரே நாளில் 213 பேர்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக உள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 60 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட னர்.
2 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் தற்போது 1,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது முதியவர் ஒருவரும், 64 வயது முதியவர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.

Next Story