மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 April 2021 8:02 PM GMT (Updated: 9 April 2021 8:02 PM GMT)

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்கிரமங்கலம்:
விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் கொலையனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கொலையனூர் தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்குமார்(வயது 40) வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் பெருமாள் தீயனூர் பகுதியை சேர்ந்த நாராயணசாமி(42) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், நாராயணசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story