ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா; ஒரே நாளில் 70 பேருக்கு பாதிப்பு


ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா; ஒரே நாளில் 70 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 9 April 2021 10:47 PM GMT (Updated: 9 April 2021 10:47 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
70 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் 10-க்கும் குறைவானவர்களே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தினந்தோறும் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 750 ஆக உயர்ந்தது.
அச்சம்
அதேநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 27 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 227 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 373 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Next Story