அந்தியூர் அருகே பயங்கரம்; கள்ளக்காதலியை தாக்கிய ஜோதிடர் கல்லால் அடித்துக்கொலை- தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து


அந்தியூர் அருகே பயங்கரம்; கள்ளக்காதலியை தாக்கிய ஜோதிடர் கல்லால் அடித்துக்கொலை- தந்தை, மகன் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 9 April 2021 10:48 PM GMT (Updated: 9 April 2021 10:48 PM GMT)

அந்தியூர் அருகே கள்ளக்காதலியை தாக்கிய ஜோதிடர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

அந்தியூர்தலியை தாக்கிய ஜோதிடர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஜோதிடர்
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 42). அவருடைய மனைவி சரோஜா (40). இவர்களுக்கு 2 மகன்களும்,  அனிதா (21) என்ற மகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது.  
கவுந்தப்பாடி ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (48). இவர் ஜோதிடர் ஆவார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இந்திரா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர்.
கள்ளக்காதல்
இந்தநிலையில் தனது மகள் அனிதாவுக்கு திருமணம் செய்து வைக்க ஜாதகம் பார்த்து கூறுமாறு ஜோதிடர் பழனிச்சாமியை சரோஜா அழைத்துள்ளார். இதனால் பழனிச்சாமி சரோஜாவின் வீட்டு்க்கு வந்து அனிதாவுக்கு  ஜாதக பொருத்தம் பார்த்து கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இந்த நிலையில் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு சரோஜாவின் கணவர் பழனிச்சாமி திடீரென இறந்துவிட்டார். இதனால் ஜோதிடர் பழனிச்சாமி அடிக்கடி சரோஜாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார். நாளடைவில் 2 பேருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் பழனிச்சாமி தனது குடும்பத்தை விட்டு விட்டு சரோஜாவின் வீட்டிலேயே குடியிருந்து வந்தார். இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்து வந்தனர்.
சொத்து தகராறு
சரோஜாவின் கணவருக்கு சொந்தமான நிலம் அந்த ஊரில் உள்ளது. சம்பவத்தன்று சரோஜாவின் மகள் அனிதா தாய் வீட்டுக்கு வந்தார்.  அவர் தனது தாயாரிடம் ‘எனக்கு திருமணம் முடிந்த நாளில் இருந்து எந்த ஒரு உதவியும் நீங்கள் செய்யவில்லை. ஜோதிடர் பழனிச்சாமியும், நீங்களும் சேர்ந்து எனக்கு சேர வேண்டிய சொத்தை தர மறுக்கிறீர்கள். உடனே எனக்கு வேண்டிய நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.
அப்போது அங்கு அனிதாவின் சித்தப்பா தெய்வராஜ் என்கிற சென்னாநாயக்கர் (45), அவரது மகன் சூரிய பிரகாஷ் மற்றும் உறவினர்கள் குமார், பிரகாஷ் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் அனிதா மற்றும் சரோஜா இடையே சொத்து பிரிப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.
கல்லால் அடித்துக்கொலை
இதுபற்றி அறிந்த ஜோதிடர் பழனிச்சாமி அங்கு வந்து சரோஜாவிடம், ‘எல்லோரும் சேர்ந்து என்னை அவமானப்படுத்துகிறீர்களா? எனக்கூறி சரோஜாவை கைகளால் தாக்கியுள்ளார். 
இதனைப்பார்த்துக்கொண்டிருந்த சென்னாநாயக்கர், சூரியபிரகாஷ், குமார், பிரகாஷ் ஆகியோர் பழனிச்சாமியை தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி 4 பேரையும் கத்தியால் குத்தியுள்ளார். 
இதில் சென்னாநாயக்கருக்கும், சூரிய பிரகாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பிரகாசும், குமாரும் கத்திக்குத்தில் காயம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சென்னாநாயக்கர் அருகே கிடந்த கல்லை எடுத்து பழனிச்சாமி மீது ஓங்கி அடித்துள்ளார்.  இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. வலி தாங்க முடியாமல் அவர் ரத்த வெள்ளத்தில் கதறி துடித்தபடியே கீழே விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் பழனிச்சாமி  இறந்தார்.
சிகிச்சை
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கத்திக்குத்தில் காயம் அடைந்த சென்னாநாயக்கர், சூரிய பிரகாஷ் ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து போலீசார் சென்னாநாயக்கர், சூரியபிரகாஷ், பிரகாஷ், குமார் ஆகிய 4 பேர் மீது  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கள்ளக்காதலியை தாக்கிய ஜோதிடர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆப்பக்கூடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story