சாத்தான்குளம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


சாத்தான்குளம் அருகே  10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 10 April 2021 4:25 PM GMT (Updated: 10 April 2021 4:25 PM GMT)

சாத்தான்குளம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 45) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுந்தரி (40). இவர்களுக்கு ரஷிகா (15) உள்பட 6 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ரஷிகா, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் ரஷிகாவின் பெற்றோர் வெளியூர் சென்று இருந்தனர். அப்போது, வீட்டில் இருந்த ரஷிகா, அவரது சகோதரி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ரஷிகா, வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். 

Next Story