மது விற்ற 11 பேர் கைது


மது விற்ற 11 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2021 8:04 PM GMT (Updated: 10 April 2021 8:04 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வோரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story