அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 April 2021 5:29 PM GMT (Updated: 11 April 2021 5:29 PM GMT)

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம் 
புன்னம்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் குந்தாணி பாளையம் நத்தம் மேடு, புன்னம் அங்காளம்மன் கோவில், அத்திப்பாளையம்  சின்ன பொன்னாச்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேலாயுதம்பாளையம் அருகே தளவாபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு நீலநிற பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதே போல், வேலாயுதம்பாளையம, நாணப்பரப்பு, கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள் மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story