மதுவிற்ற பெண் கைது


மதுவிற்ற பெண் கைது
x
தினத்தந்தி 11 April 2021 6:31 PM GMT (Updated: 11 April 2021 6:31 PM GMT)

மதுவிற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் அருகில் இந்திராநகர் முதல் வீதியைச் சேர்ந்த திருநாவுக்கரசின் மனைவி ஜெயந்தி (வயது 40) என்ற பெண் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது.  அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story