முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
தினத்தந்தி 11 April 2021 7:38 PM GMT (Updated: 11 April 2021 7:38 PM GMT)

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது

திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளியில் 1982-83-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் 38 ஆண்டுகள் பிறகு சந்தித்த விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியை முருகேஸ்வரி முன்னிலை வகித்தார். சென்னை விவேகானந்த கல்லூரி பேராசிரியர் காந்திராஜ் வரவேற்றார். விழாவையொட்டி பழைய மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் பள்ளியில் படித்தபோது ஏற்பட்ட பசுமை நிறைந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பிரபாகரன், ஜெயக்குமார், வாசுகி, பாரதி, முருகேஸ்வரி செய்து இருந்தனர்.

Next Story