மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 April 2021 5:56 PM GMT (Updated: 13 April 2021 5:56 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை, ஏப்.14-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து792 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

Next Story