விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை


விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 13 April 2021 7:40 PM GMT (Updated: 13 April 2021 7:40 PM GMT)

லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த விஜயனின் மகன் மணிகண்டன் (வயது 36). டிப்பர் லாரி டிரைவர். இவருக்கு அனிதா (33) என்ற மனைவியும், அரவிந்த் (9), மோனிகா (5) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணிகண்டனின் இரு கால்களிலும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டதையடுத்து, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த நிலையில் வலி வேதனையாலும், வேலைக்கு செல்ல முடியவில்லையே என்ற விரக்தியாலும் அவர் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுதொடர்பாக அனிதா பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Next Story