மயங்கி கிடந்தவர் சாவு


மயங்கி கிடந்தவர் சாவு
x
தினத்தந்தி 13 April 2021 7:40 PM GMT (Updated: 13 April 2021 7:40 PM GMT)

சாலையோரம் மயங்கி கிடந்தவர் இறந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் நான்குரோடு அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து எளம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story