விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 13 April 2021 8:32 PM GMT (Updated: 13 April 2021 8:32 PM GMT)

சாத்தூரில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே பெரிய ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சுப்புராஜ் என்ற சுரேஷ் (வயது35). விவசாயி. இவர் கடன்  வாங்கி விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் தகராறு வந்துள்ளது. வாங்கிய கடனை திருப்ப கொடுக்க முடியாததால் மன வேதனை அடைந்த  சுரேஷ் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்துள்ளார். உடனே அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சுரேசின் மனைவி அளித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story