முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 13 April 2021 9:09 PM GMT (Updated: 13 April 2021 9:09 PM GMT)

அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன், நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன் ஆகியோர் தலைமையில் புதிய பஸ் நிலையம், பந்தல்குடி ரோடு, எம்.எஸ். கார்னர், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் முககவசம் இன்றி யாரும் வருகிறார்களா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.
அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். 

Next Story