கரூர் மாவட்டத்தில் மேலும் 26 பேர் கொரோனா


கரூர் மாவட்டத்தில் மேலும் 26 பேர் கொரோனா
x

கரூர் மாவட்டத்தில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்
26 பேருக்கு கொரோனா
கொரோனாவின் 2-ம் அலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 அதன்படி குளித்தலையை சேர்ந்த 37 வயது பெண், 39 வயது ஆண், 63 வயது முதியவர், 38 வயது பெண், கரூர் காகிதபுரத்தை சேர்ந்த 40 வயது பெண், பள்ளப்பட்டியை சேர்ந்த 65 வயது முதியவர், வெண்ணைமலையை சேர்ந்த 47 வயது ஆண், ஆண்டாங்கோவிலை சேர்ந்த 54 வயது ஆண், தாந்தோணிமலையை சேர்ந்த 42 வயது ஆண் மற்றும் 24 வயது வாலிபர்.
சிகிச்சை
கரூர் வையாபுரிநகரை சேர்ந்த 63 வயது முதியவர், அரவக்குறிச்சியை சேர்ந்த 48 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 41 வயது ஆண், 61 வயது முதியவர் மற்றும் 35 வயது வாலிபர், பசுபதிபாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, முத்துராஜபுரத்தை சேர்ந்த 45 வயது ஆண், வாங்கலை சேர்ந்த 35 வயது ஆண், சின்னதாராபுரத்தை சேர்ந்த 53 வயது பெண் உள்பட 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story