விஷம் குடித்து பழ வியாபாரி தற்கொலை


விஷம் குடித்து பழ வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2021 7:38 PM GMT (Updated: 14 April 2021 7:38 PM GMT)

விருத்தாசலத்தில் வறுமையால் பழ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் தென்கோட்டை வீதியை சேர்ந்தவர் (பாபு 45). தள்ளுவண்டியில் பழங்களை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் கடந்த சில நாட்களாக பாபு மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாபு விஷத்தை எடுத்துகுடித்து விட்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

போலீசார் விசாரணை

 பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக  கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  நேற்றுமுன்தினம் பாபு பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story