முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை


முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2021 1:56 PM GMT (Updated: 15 April 2021 1:56 PM GMT)

முத்துப்பேட்டை அருகே விஷம் தின்று வாலிபர் தற்கொலை.

முத்துப்பேட்டை, 

முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவருைடய மகன் விக்னேஷ்(வயது25). சம்பவத்தன்று விக்னேசை அவரது பெற்றோர் திட்டினர். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story