மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2021 5:13 PM GMT (Updated: 15 April 2021 5:13 PM GMT)

கோவில்பட்டி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி, ஏப்:
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்தையா மனைவி மாரியம்மாள் (வயது 82). இவர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மாரியம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்கு மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story