கரூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேர் கொரோனா


கரூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேர் கொரோனா
x
தினத்தந்தி 15 April 2021 6:07 PM GMT (Updated: 15 April 2021 6:07 PM GMT)

கரூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்
23 பேருக்கு கொரோனா
கொரோனாவின் இரண்டாம் அலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெங்கமேட்டை சேர்ந்த 72 வயது மூதாட்டி மற்றும் 70 வயது முதியவர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 65 வயது முதியவர், புலியூரை சேர்ந்த 60 வயது முதியவர், அரவக்குறிச்சியை சேர்ந்த 38 வயது ஆண், குப்புச்சிப்பட்டியை சேர்ந்த 37 வயது ஆண், முத்துராஜபுரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, பள்ளப்பாளையத்தை சேர்ந்த 48 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 44 வயது ஆண்.
சிகிச்சை
தோட்டக்குறிச்சியை சேர்ந்த 45 வயது ஆண், சின்னதாராபுரத்தை சேர்ந்த 58 வயது ஆண் மற்றும் 55 வயது பெண், மணவாடியை சேர்ந்த 29 வயது வாலிபர், பசுபதிபாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், அண்ணாநகரை சேர்ந்த 74 வயது முதியவர், செங்குந்தபுரத்தை சேர்ந்த 41 வயது ஆண், வெள்ளியணையை சேர்ந்த 63 வயது மூதாட்டி, வாங்கலை சேர்ந்த 50 வயது முதியவர், வையாபுரிநகரை சேர்ந்த 27 வயது வாலிபர் உள்ளிட்ட 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story