டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி


டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 April 2021 7:15 PM GMT (Updated: 15 April 2021 7:15 PM GMT)

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அத்தியூர் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் மணிகண்டன்(வயது 27). இவர் லெப்பைக்குடிக்காட்டில் குளிர்பான கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் அகரம்சீகூரில் இருந்து அத்தியூர் புதுப்பேட்டை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அகரம்சீகூர் தடுப்பணை அருகே சென்றபோது மெயின்ரோட்டின் ஓரமாக நின்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் அங்கு விரைந்து வந்து, மணிகண்டனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story