எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை


எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2021 8:46 PM GMT (Updated: 15 April 2021 8:46 PM GMT)

எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

இடிகரை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ராக்கிபாளையம் அன்னை இந்திராநகரை சேர்ந்தவர் தனபால் (வயது 42). தொழிலாளி. இவருடைய மூத்த மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். 

இதை அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதை மீறி தனபாலின் மூத்த மகள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அந்த வாலிபரை திருமணம் செய்துகொண்டார். 

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனபால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story