வீட்டில் நகை, பணம் திருட்டு


வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 April 2021 7:01 PM GMT (Updated: 16 April 2021 7:01 PM GMT)

பாளையங்கோட்டையில் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

நெல்லை:

பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சுப்பையா (வயது 32). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். இவருடைய நண்பர் பேட்டை செக்கடியை சேர்ந்த செந்தில் கணேஷ் (31) என்பவர் அவ்வப்போது வீட்டுக்கு சென்று பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த 5 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story