காதல் தோல்வியால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி


காதல் தோல்வியால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 20 April 2021 8:47 PM GMT (Updated: 20 April 2021 8:47 PM GMT)

திருச்சியில் காதல் தோல்வியால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

கே.கே.நகர்:

பெண் போலீஸ்
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா குறிச்சி  பகுதியை  சேர்ந்த பட்டதாாி  பெண் ஒருவர். கடந்த 2017-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்தார். தற்போது திருச்சி ஆயுதப் படையில் பணியாற்றி வரும் இவர் ஆயுதப்படை குடியிருப்பில் தங்கி உள்ளார். 
இவர் தன்னுடன் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவரை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்காக அந்த போலீஸ்காரர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த பெண் போலீசின்  வீட்டிற்கு சென்று பெண் கேட்டு உள்ளார். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பெண் போலீசின் பெற்றோர் சாதியை காரணம் காட்டி பெண் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் கடந்த மாதம் அந்தப் போலீஸ்காரர் தனது மாமன் மகளை திருமணம் செய்து கொண்டார். 
தற்கொலை முயற்சி
இந்த நிலையில் காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று காலை எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த சக போலீசார் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story